பிரபல செல்போன் விற்பனையாளர் மீது கொண்ட ஆத்திரம்..? சென்னையில் விலை உயர்ந்த செல்போனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய இளைஞர்..!
youth burns mbile near poorvika mobiles
சென்னை அடுத்த குரோம்பேட்டையில் பூர்விகா என்ற செல்போன் கடையில் கடப்பேரியில் பகுதியில் வசித்து வரும் தலைமலை என்பவர் விலை உயர்ந்த செல்போன் வாங்கியுள்ளார்.
செல்போன் சரியாக இயங்காததால் அது குறித்து கடை மேலாளரிடம் கேட்டபோது இது சம்மந்தமாக சர்வீஸ் செண்டர் மற்றும் தயாரிப்பு கம்பெனியைதான் நீங்கள் அனுகுமாறு கூறினர்.
ஆந்திரம் அடைந்த செல்போன் வாடிக்கையாளர் கடைமுன் வைத்து பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார் இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே பல புகார்கள் இந்நிறுவனத்தின் மீது முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் தானும் ஏமாற்றப்பட்டதாக அங்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார். அதில், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் உள்ளது.
எந்த பழைய மொபைல் ஆனாலும் எடுத்துக்கொண்டு புதிய மொபைல்ஸ் விலையில் தள்ளுபடி செய்வோம் என்றதன் பேரில் எனது பழைய மொபைலை கொடுத்தேன்.
பார்த்துவிட்டு 3000 தள்ளுபடி செய்கிறோம் என சொல்லி புதிய மொபைலுக்கு பணத்தை அடைக்க சொன்னார்கள்.
அது மட்டும் இன்றி எனக்கு தேவை இல்லாத ஹெட்போன், பவர் பேங்க், போன்றவற்றை தலையில் கட்டினார்கள்.
பில் போட்ட பிறகு எனது பழைய போன் மைக் வேலை செய்யவில்லை என கூறி 2000 தான் தள்ளுபடி செய்யமுடியும் என கூறுகிறார்கள்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை பணத்தை திரும்ப கொடுங்கள் எனக்கு தேவையில்லை என்றதற்கு கார்ட் மூலம் செலுத்தியதால் திரும்ப தர இயலாது என சொல்லிவிட்டார்கள்.
உங்கள் மேனேஜரை அழையுங்கள் நான் பேச வேண்டும் என்றேன். அதற்கு லீவு என்கிறார்கள்..எனக்கு இவர்கள் நேரடியாக ஏமாத்துவது தெளிவாக தெரிந்த போதிலும் செய்வதறியாது பணத்தை குடுத்து விட்டு வெளியே வந்தேன்' என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
English Summary
youth burns mbile near poorvika mobiles