இன்ஸ்டாகிராம் மூலம் பழகி பெண்களை ஏமாற்றிய என்ஜினீயர் கைது..!
youth arrested Who Sexually harassed woman
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை பழவந்தாங்கலை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் திருச்சி கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளித்தாஏ. இந்த புகாரில் திருச்சி தில்லைநகரைச் சேர்ந்த விஷ்வாவுடன் (29) இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும் இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.
அப்போது அந்த பெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு, அதை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி பணம் நகை, க்கணினி, ஐ-போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டதாகவும் கூறி இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் விஷ்வாவை கைது செய்தனர்.
அவரிடம் இருந்த மடிக்கணினியை ஆய்வு செய்த போது 30-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோவை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் அளித்த வாக்குமூலத்தில்,, முதலில் நட்பாக அறிமுகமாகி பின்பு அவர்களின் பிண்ணனி முழுவதும் தெரிந்து கொண்டு அவர்களிடம் அதற்கேற்றாற் போல் பழகவும்.
குறிப்பாக பெற்றோரின் அன்பு, அரவணைப்பு இல்லாத மாணவிகளிடம் ஆதரவாக பேசியும், அன்பாக பழகியும் அவர்களை காதல் வலையில் வீழ்த்தி நேரில் பார்க்க அழைத்து சென்று ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அதை வைத்து மிரட்டி நகைகள் மற்றும் பணம் பறிப்பதாக தெரிவித்தார். இதனை அடுத்து, அவர் மீது வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
youth arrested Who Sexually harassed woman