9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வாலிபர் போக்சோவில் கைது..!
youth arrested In POCSO Near Nagapattinam
9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாலியல் வன்கொடுமை தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்களாலேயே நடத்தப்படுவதே கொடுமையின் உச்சம்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள வெண்மணஞ்சேரி பகுதியில் 9 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமி தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த அஜித் குமார் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால், பயந்துபோன அந்த சிறுமி உடனே இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் அஜித்குமார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
youth arrested In POCSO Near Nagapattinam