பாலியல் தொல்லை அளித்தவரை கற்களால் அடித்த சிறுமி... இளைஞர் கைது...!
youth arrested In POCSO Due to Harassing Boy Near Vizhuppuram
7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை காவல்துறையினர் காய்து செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். விடுமுறை தினங்களில் அவர் வீட்டிலுள்ள கால்நடைகளை மேய்சலுக்கு கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சம்பவதன்று, வழக்கம் போல கால்நடைகளை மேய்சலுக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதானால், பயந்து போனா அந்த சிறுமி அங்கிருந்த கற்களை கொண்டு தாக்கியுள்ளார்.
இதில், காயமடைந்த திருநாவுகரசு நிலைகுலைந்து கீழே விழுந்ததும் அங்கிருந்து தப்பி தனது பெற்றோரிடம் இது பற்றி கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் திருநாவுகரசை கைது செய்தனர்.
English Summary
youth arrested In POCSO Due to Harassing Boy Near Vizhuppuram