கரூர் : 8 வயது சிறுவனுக்கு நேர்ந்த அவலம்.. இளைஞர் போக்சோவில் கைது..!
youth arrested In POCSO Due to Harassing Boy Near Karur
8 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரூரில் 8 வயது சிறுவன் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், பழைய ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் அறிவானந்தம் இவர் அந்த பகுதியில் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் வேலைக்கு சென்ற பொழுது கிருஷ்ணாபுரம் பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுவன் ஒருவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
அந்த சிறுவனின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர் இதனையடுத்து அறிவானந்தா கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
English Summary
youth arrested In POCSO Due to Harassing Boy Near Karur