வேறோரு பெண்ணுடன் பழக்கம்.. தட்டிகேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல்.. வாலிபர் கைது..!
youth arrested for threaten case in coimbatore
வேறொரு பெண்ணுடன் நெருங்கி பழகி வந்த கணவனை கண்டித்ததுக்காக மனைவிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரித்திக் (22). இவர் கடந்த ஒன்ரறை ஆண்டுகளுக்குமுன் அஞ்சுஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன் இவர்களின் குழந்தை இறந்துவிட்டது. இதனால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரித்திக் தனது இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார்.
இதனை அடுத்து, அந்த பெண்ணுடன் நெருங்கி பழகி வந்த ரித்திக் அந்த பெண்ணிடம் 3 லட்சம் ரூபாய் கடனுன் வாங்கியுள்ளார். இதுகுறித்து, அஞ்சுஷா கணவனிடம் கேட்கவே இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மனைவிக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதனால், பயந்துபோன அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ரித்திக்கை கைது செய்தனர்.
English Summary
youth arrested for threaten case in coimbatore