ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை.! போக்சோவில் இளைஞர் கைது.!
Youth arrested for sexually harassing girl in tiruvallur
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் முத்தாபுதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அரசு உதவிபெறும் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கும், திருவள்ளூர் தளக்கச்சேரி பகுதியை சேர்ந்த யுவராஜ்(21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 25ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை.
பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், இதுகுறித்து சிறுமியின் தாய், முத்தா புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், யுவராஜ் சிறுமிக்கு திருமண ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் யுவராஜை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமியை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.
English Summary
Youth arrested for sexually harassing girl in tiruvallur