11ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை... இளைஞர் மீது பாய்ந்தது போக்சோ...!
Youth arrested for sexually abusing 11th class student
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கள்ளகுறிச்சி மாவட்டம், வடதொரசலூர் கிராமத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள அரசுமேல்நிலைபள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் அந்த பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருகும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த சிறுமியிடம் திருமணம் செய்வதாக கூறி பல முறை அவரை பாலியய்ல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில், கொரோனா ஊரடங்கின் போது அந்த சிறுமி கேரளாவிற்கு வீட்டு வேலை செய்வதற்காக சென்றுள்ளார்.
வேலை செய்து கொண்டிருக்கும் போது அந்த சிறுமி மயங்கி விழுந்துள்ளார். உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை அடுத்து, கேரள காவல்துறையிடம் இருந்து கள்ளகுறிச்சி காவல்நிலையத்திடம் அனுப்பப்பட்டது. இதனை அடுத்து, விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து, வெங்கடேசன் கைது செய்தனர்.
English Summary
Youth arrested for sexually abusing 11th class student