குடிபோதையில் நண்பனை வெட்டிக்கொன்ற வாலிபர்.! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


நாகை மாவட்டத்தில் குடிபோதையில் நண்பனை வெட்டிக்கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் எரவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். இவரும் ஆழியூர் பகுதியைச் சேர்ந்த நவீனும் நண்பர்கள். இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் பூலாங்குடி பேருந்து நிலையம் அருகே மது அருந்தியபடி பேசிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது மது போதையில் இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணராஜ், இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த பட்டாகத்தியை எடுத்து நவீனை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில் நவீன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், நவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மது போதையில் நண்பனை பட்டாக்கத்தியால் வெட்டிக்கொலை செய்த கிருஷ்ணராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested for murder a friend in nagapattinam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->