நான்கு வருட ஒரு தலைகாதல்.. இளம்பெண்ணுக்கு கொலைமிரட்டல்.. இளைஞர் கைது..!
youth arrested due to Murder thread to young girl
காதலை ஏற்காத பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் , குமந்தாபுரத்தை சேர்ந்தவர் கணேஷ்பாபு (21) . இவர் நெல்லையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த நான்கு வருடமாக அதே பகுதியை சேர்ந்த பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 18ம் தேதி அந்த பெண்ணை சந்தித்த அவர் காதலிக்க வலியுறுத்தியதாக தெரிகிறது. மேலும், காதலிக்க மறுத்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனை அந்த மாணவி உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் கணேஷ்பாபு கைது செய்தனர்.
English Summary
youth arrested due to Murder thread to young girl