கள்ளகாதலி தற்கொலை.. கணவனை கொலை செய்த இளைஞர்.. தேனி அருகே பரபரப்பு..!
youth arrested due to Killing a man near kambam
கள்ளக்காதலியின் கணவர் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் காமய கவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் தங்கரமேஷ். இவர் கடந்த 24 ஆம் தேதியன்று கம்பம் பேருந்து நிலையத்தின் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிராக்டர் ஒன்று அவர் மீது மோதியது. இதில், நிலைதடுமாறிய அவரை டாக்டரின் ஓட்டுநர் கட்டையைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தினார்.
உடனடியாக இது குறித்து அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ரமேஷ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக அதே பகுதியை சேர்ந்த அசன் குமார் என்பவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது, ரமேஷ் மற்றும் அசன் இருவரும் அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் இந் நிலையில் இருக்கும் தன் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
ரமேஷுக்கு தெரியவரவே அவரது மனைவி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே சம்பவத்தன்று ரமேஷ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார்.
இதனை அடுத்து, அசன் குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கள்ளக்காதல் விவகாரத்தால் ஒரு குடும்பமே நிலைகுலைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
youth arrested due to Killing a man near kambam