ஒருதலைகாதலை தட்டிகேட்ட அண்ணனுகு கத்திகுத்து..!
youth arrested due to attempt Murder Near Thoothukudi
முன்விரோதம் காரணமாக இளைஞர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், பொன்னகரத்தை சேர்ந்தவா் உதயகுமார். இவரது 17 வயது தங்கையை தூத்துக்குடி சக்திவிநாயகர்புரத்தை சேர்ந்த முத்துராமன் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
சிறுமியை காதலிக்குமாறு துன்புறுத்தியுள்ளார். இதனை அறிந்த உதயகுமாரன் முத்துராமனை கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையில் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், உதயகுமாருடன் முத்துராமன் மற்றும் அவரது நண்பர் ராம்குமார் ஆகியோர் தகராற்றில் ஈடுப்பட்டனர்.
ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே உதயகுமாரை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அவரை மீட்ட அக்கம்பக்கதினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் முத்துராமன் மற்றும் அவரது நண்பர் ராம்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
English Summary
youth arrested due to attempt Murder Near Thoothukudi