என் ஆசைக்கு இணங்க வேண்டும். முன்னாள் காதலியை மிரட்டிய இளைஞர்.. காவல்துறை அதிரடி..!
Youth arrested by Police
முன்னாள் காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், முடசல்ஓடை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் சந்தியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு சந்தியா அந்த பகுதியை சேர்ந்த மற்றொரு மணிகண்டன் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முன்னாள் காதலன் மணிகண்டன் திருமணத்திற்கு பின் சந்தியாவிற்கு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், தன்னுடைய ஆசைக்கு இணங்கவில்லை எனில் காதலித்த போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால், பயந்து போன சந்தியா இது குறித்து தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார், இந்நிலையில், அவர்கள் அரிவுறுத்தலின் பேரில் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.