செல்பி மோகத்தால் நீர்சுழலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் - மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பர்லியார் பகுதியை சார்ந்தவர் ஸ்ரீதரன். இவர் அப்பகுதியில் தேநீர் கடை நடத்தி வரும் நிலையில், இவரது மனைவி சங்கீதா. இவர்கள் இருவருக்கும் அகில் (வயது 20), நிகில் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். 

அகில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் வருடம் பயின்று வரும் நிலையில், நேற்று மாலை நேரத்தில் அகில் மற்றும் நிகில், இவர்களின் உறவினர்கள் அங்குள்ள மரப்பாலம் நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.

அகில் பாறையின் மீது ஏறி நின்று செல்பி எடுக்க முயற்சிக்கவே, கால் இடறி நீர்வீழ்ச்சிக்கு விழுந்து சூழலில் சிக்கியுள்ளார். இதனால் தண்ணீரில் தத்தளித்த நிலையில், உறவினர்களும் செய்வதறியாது திகைத்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அகில தேடிய சமயத்தில் உடல் கிடைக்கவில்லை. மேலும், அந்த சமயத்தில் மழை பெய்ய துவங்கியதை அடுத்து, பணி தற்காலிகமாக கைவிடப்பட்டது. பின்னர் இன்று அங்குள்ள பாறை இடுக்கில் அகிலின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youngster died in Nilgiris due to selfie addiction


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->