பெண் மருத்துவரிடம் அத்துமீறிய காமுகன்.. செருப்பை கழற்றி அடித்து நொறுக்கிய பெண்மணி.!!
Youngster attack by Lady Doctor due to sexual torture in Vellore
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ள அடுக்கம்பாறையில் வேலூர் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டுள்ள நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நோயாளிகளை கவனிப்பதற்கும், நலன் விசாரிப்பதற்கும் எப்போதும் மக்கள் வந்து சென்ற வண்ணம் இருப்பார்கள்.
இந்த மருத்துவமனையின் பிரசவ வார்டில் சுமார் 40 பேர் இருப்பார்கள். சம்பவத்தன்று 40 வயதுள்ள பெண் மருத்துவர், கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இந்த நேரத்தில் அங்கிருந்த இளைஞர் பெண் மருத்துவரை நோட்டமிட்ட நிலையில், பெண் மருத்துவரிடம் அத்துமீறியுள்ளார்.
பதற்றமடைந்த பெண் மருத்துவர் ஆத்திரத்தின் உச்சியில், இளைஞனை செருப்பை கழற்றி அடித்து நொறுக்கிய நிலையில், மருத்துவமனை காவல் அதிகாரியிடம் விஷயத்தை கூறி இளைஞனை ஒப்படைத்துள்ளார்.
இதனையடுத்து இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல் துறையினர் இளைஞனை கைது செய்து விசாரித்தனர். இதில், கண்ணமங்கலம் பகுதியை சார்ந்த பரசுராமன் என்பது தெரியவந்தது. இளைஞரின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Tamil online news Today News in Tamil
English Summary
Youngster attack by Lady Doctor due to sexual torture in Vellore