மதுபான கடை முன்பு வாலிபர் வெட்டி கொலை.! 3 பேர் தலைமுறை.! போலீசார் விசாரணை - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுபான கடை முன்பு வாலிபர் வெட்டி கொலை செய்த மூன்று பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே பள்ளி அக்ரகாரத்தை சேர்ந்தவர் பிரேம்(33). இவர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் உதவியாளராக தஞ்சாவூரில் வேலை பார்த்து வந்தார்.

இவர் நேற்று மாலை அரசு மதுபான கடை முன்பு மது அருந்தியுள்ளார். அப்பொழுது அங்கு பிரேமுக்கும், பிரகாஷ், மணி, சூரி ஆகியவருடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது ஆத்திரமடைந்த மூன்று பேரும், பிரேமை சரமாரியாக அறிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த நடுக்காவேரி போலீசார் உயிரிழந்த பிரேமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரேமை வெட்டி கொன்று விட்டு தப்பிச்சென்ற மூன்று பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youngman was hacked to death in Thanjavur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->