கரூர்: குடும்பத் தகராறு காரணமாக இளைஞர் தற்கொலை.!
Youngman suicide in karur
கரூர் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம் மணவாடி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் பெயிண்டர் சுரேஷ் (23). இவருக்கும் இளமதி என்ற பெண்ணுக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனவேதனை அடைந்த சுரேஷ் வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வெள்ளியணை போலீசார் உயிரிழந்த சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Youngman suicide in karur