உல்லாசமாக இருந்துவிட்டு, திருமணம் செய்துகொள்ள மறுப்பு.! காதலி செய்த காரியத்தால் அவமானத்தில் இளைஞன் எடுத்த பகீர் முடிவு!!
youngman comit suicide for lover act
மைசூர் மாவட்டம் மல்லுபுரா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் க்ரிஷ். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் ஒன்றாக பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர். மேலும் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்பொழுதெல்லாம் இருவரும் தங்களுடைய செல்போன்களில் செல்பி வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் க்ரிஷ் மற்றும் அவரது காதலிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் க்ரிஷ் அவரது காதலியை திருமணம் செய்துகொள்ளகூடாது என கூறியுள்ளார். இந்நிலையில் அவர் காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த க்ரிஷ் அவமானத்தால் வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனை அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில். திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் க்ரிஷின் காதலியே ஆத்திரமடைந்து தங்கள் இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாகியுள்ள காதலியை தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
youngman comit suicide for lover act