அண்னனை கொலை செய்து விட்டு நாடகமாடிய தம்பி.. விசாரணையில் வெளிவந்த உண்மை..! - Seithipunal
Seithipunal


தம்பியே அண்ணனை கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், கோவிந்தராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லெட்சுமிநாராயணன். அந்த பகுதியில் சொந்தமாக டிராவல்ஸ் வைத்து வருகிறார். இவர் கடந்த 2ஆம் தேதி காலை வீட்டில் கழுத்தில் கத்திக் குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

தகவலறிந்து, வந்த காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில்,  அவரின் சகோதர் ஜானகி ராமனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனட். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனை அடுத்து அவரிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர்.

அண்ணனை கொலை செய்ததை ஒப்புகொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில், ஜானகிராமன் நடவடிக்கைகள் சரியில்லாததால் அதனை லட்சுமிநாராயணன் கண்டித்துள்ளார். மேலும் குடும்ப செலவுக்கும் ஜானகிராமன் பணம் தராததாலும், அவரை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர் நள்ளிரவு தூங்கி கொண்டிருந்த லட்சுமி நாராயணனை கொலை செய்துள்ளார்.

இதனை அடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Younger Brother Murder his elder Brother


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->