திருமணத்திற்கு பிறகு காதலனை அழைத்து பேசிய இளம்பெண்!! பின்னர் நடந்த கொடூர சம்பவம்!!
young women murdered for illega affairs
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமத்தை அடுத்த டி.வல்லக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மாயாண்டி. இவருக்கு ராதிகா என்ற 22 வயது மகள் உள்ளார். ராதிகாவிற்கும் பக்கத்துக்கு கிராமத்தை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் அடிக்கடி வீட்டில் சண்டை வந்துள்ளது. இதனால் ராதிகா கணவனை விட்டு பிரிந்து தனது தாய் விட்டில் கடந்த ஒரு வருடமாக வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் ராதிகாவிற்கும், அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளைடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இவர்களின் கள்ளக்காதல் விஷயம் ராதிகாவின் உறவினருக்கு தெரிந்து ராதிகாவை அவர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 29-ஆம் திகதி ராதிகா வீட்டின் அருகே இருக்கும் கண்மாயில் உடல் கருகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், ராதிகா தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் காதலன் கருப்பசாமிதான் ராதிகாவை கொலை செய்துள்ளார் என உறவினர்கள் புகார் தெரிவித்தனர். மேலும் ராதிகாவின் கொலைக்கு நியாயம் வேண்டும் என போராட்டம் செய்து ராதிகாவின் உடலை வாங்க மறுத்துவிட்டனர்.
இதனையடுத்து போலீசார் மேற்கொண்டு வந்த விசாரணையில், கள்ளத்தொடர்பை கைவிடாததால் ஆத்திரத்தில் ராதிகாவை அவருடைய உறவினர்கள் அடித்து கொடூரமாக கொன்றுவிட்டு, உடலை கண்மாய் கரையில் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்து எரித்தது தெரியவந்தது.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சம்பவ தினத்தன்று ராதிகா, தன்னுடைய காதலனான கருப்பசாமியை சந்தித்து பேசியுள்ளார். இதனை பார்த்த ராதிகாவின் உறவினர்களாக கண்டித்துள்ளனர். ஆனால் ராதிகா நான் தான் வரச் சொன்னேன் என்று அவர்கள் மனம் நோகும் படி பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராதிகாவின் உறவினர்கள் ராதிகாவை பலமாக தாக்கி சுவரில் மோதவைத்து கொலை கொலை செய்தது தெரியவந்தது.
English Summary
young women murdered for illega affairs