வீட்டிலேயே பிரசவம் பார்த்தால் இளம்பெண் உயிரிழப்பு.. காவல்துறையினர் விசாரணை..! - Seithipunal
Seithipunal


வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், நிமினி வயல் பகுதியைச் சேர்ந்த தேவன் என்பவரின் மகள் பிரியா. இவர் அந்த பகுதியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளனர். இதனால், அந்த இளம்பெண் கர்ப்பமடைந்தார். நேற்று முன் தினம் பிரியா இறந்திவிட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தியதில், அவர் அவர் காதலித்த இளைஞரால் கர்பமடைந்தார் எனவும் வெளியில் தெரிந்தால் அவமானம் எனக்கருதி வீட்டிலேயே பிரசவம் பார்த்ததாக கூறினர். அதிக அளவு ரத்த போக்கால் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.மேலும், சிசுவை வீட்டின் புதைத்ததாக தெரிவித்தனர். அதன்பின், வருவாய்துறையினரின் புதைத்த சிசுவின் உடலை தோண்டி எடுத்தனர்.

இளம்பெண்ணின் பிரேதபரிசோதனை அறிக்கை, சிசுவின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கையும் கிடைத்த பின்னர் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கபடும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young Woman Death in Delivery


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->