திருப்பூர் அருகே இளம்பெண் தற்கொலை.. காவல்துறை விசாரணை..!
young Woman Committed Suicide Near Thiruppur
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், செட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணி (24). இவர் கல்லூரி முடித்து விட்டு ஆன்லைன் மார்க்கெட்டிங்கில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்வதற்கு அவரது பெற்றோர் ஏற்பாடு செய்து வருகிறது.
இதற்கு கலைவாணி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர் அறை கதவு திறக்கபடாததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் அங்கு சென்று பார்த்த போது அவர் தூக்கிட்டு பிணமாக தொங்கியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணம் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு ஆலோசனை தரவும், ஆறுதல் சொல்லவும் அழையுங்கள்.
104 , 044 -2464000 (ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்)
022-25521111 (ஐகால் ப்யசோசோசியல் ஹெல்ப்லைன்) (Mon – Sat, 8am–10pm) உங்கள் போன் நம்பர் கூட பதிவு செய்யப்படாது. உங்கள் பெயர், முகவரி எதுவும் சொல்ல தேவையில்லை. உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படாது. உங்கள் மனம்விட்டு பேசுங்கள்., தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வரலாம்.
English Summary
young Woman Committed Suicide Near Thiruppur