மதுவுக்கு அடிமையான காதல் கணவன்.. திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தற்கொலை..!
young woman Committed Suicide
திருமணமான எட்டு மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மேகலா. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் சாலி கிராமத்தை சேர்ந்த யுவராஜ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இது மேகலாவின் பெற்றோருக்கு தெரிய வரவே மகளுக்கு வேறொரு இடத்தில் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
ஆனால் மேகலா வீட்டை விட்டு வெளியேறி கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு இவரது திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவருக்கு குடிப்பழக்கம் இருப்பது மேகலாவுக்கு தெரியவந்தது .இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் யுவராஜ் மேகலாவை அடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மேகலா தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த கணவன் தன்னை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. படுக்கை அறையில் இருந்த அவர் வெகு நேரமாக வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்டு அதிர்ச்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்து வந்த காவல்துறை அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 8 மாதங்களே ஆனதால் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. காதல் கணவன் மனைவிக்கு அடிமையானதால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
young woman Committed Suicide