நடத்தையை தவறாக பேசிய அக்கம்பக்கத்தினர்... மாணவி தற்கொலை... உருக்கமான கடிதம் சிக்கியது..!
young Woman Committed Suicide
அக்கம்பக்கதினர் தவறாக பேசியதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்துமேடு பகுதியை சேர்ந்தவர் பாக்கியநாதன். இவருக்கு திருமணமாகி சந்தனமேரி என்ற மனைவியும் ஷெரினா கேத்திரின் என்ற மகளும் உள்ளனர்.
ஷெரினா கேத்திரின் அந்த பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், அவர் யாரையோ காதலிப்பதாக அக்கம்பக்கதினர் தவறாக பேசிவந்துள்ளார்.
இதனால், ஷெரினா கேத்திரின் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவதன்று, வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.
அதில், நான் பாம்பு கடித்தது இறந்ததாக சொல்லி விடுங்கள் இல்லையேல் ஒன்றுக்கு இரண்டாக் பேசுவார்கள் என வேதனையுடன் அந்த கடித்தத்தை எழுதி இருந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைதத்னர். வழக்கு[மேலும், வழக்குபதிவு செய்து விசாரணைன் மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
young Woman Committed Suicide