வாலிபர் விஷம் குடித்து தற்கொலை.! போலீசார் விசாரணை.!
Young man suicide in erode
ஈரோடு மாவட்டத்தில் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரதாப்(30). இவர் மூலப்பாளையத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி வித்தியா. இந்நிலையில் சம்பவத்தன்று பிரதாப் இரவு உணவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுள்ளார்.
பின்பு நள்ளிரவில் பிரதாப் திடீரென வாந்தி எடுத்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் பிரதாப் விஷம் குடித்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் பிரதாப்புக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார், வழக்கு பதிவு செய்து பிரதாப் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Young man suicide in erode