விருதுநகர் || 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! போக்சோவில் வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது 4 வயது மகளை வீட்டில் விட்டு விட்டு, பின்புறம் துணிகளை துவைக்க சென்றுள்ளார். அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த அய்யனார் என்ற வாலிபர் வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதையடுத்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்குள் ஓடி வந்து சிறுமியின் தாய் பார்த்தபோது, அய்யனாரின் செயலைக் கொண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் இருக்கன்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அய்யனாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man sexually harassed a 4 year old girl was arrested in virudhunagar


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->