நண்பனை கொலை செய்து ஆற்றில் வீசிய வாலிபர்.. வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்...! - Seithipunal
Seithipunal


மனைவியிடம் தவறாக நடந்த நண்பனை வாலிபர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவருக்கு திருமணமாகி நிர்மலா என்ற மனைவி இருக்கிறார். இவரின்  நண்பர் வெங்கடேஷ் என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தினேஷ்குமாரின் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

ஆனால், அவர் நீண்ட  நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் தினேஷ்குமாரிடம் வந்து கேட்டுள்ளனர். ஆனால், அவர் சரியாக பதில் சொல்லியதால் அவரிடம் தகராற்றில் ஈடுப்பட்டனர். இதனால், பயந்து போன அவர் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

அப்போது அவர்கள் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த அவர்கள் கிடுக்குப்பிடி விசாரணையில் ஈடுப்பட்டனர். அப்போது, பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்ததுள்ளன.

தனது மனைவியிடம் வெங்கடேஷ் தவறாக பேசியதால் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு தனது தம்பியின் உதவியுடன் சடலத்தை ஆற்றில் வீசியதாக  தெரிவித்துள்ளார். இந்த தகவலை அடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young Man Murder Near Namakkal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->