காதலிக்க மறுத்த பள்ளி சிறுமி., பண்ருட்டி அருகே நாடக காதல் வெறியன் அரங்கேற்றிய கொடூரம்.! - Seithipunal
Seithipunal


பண்ருட்டி அருகே காதலிக்க மறுத்த பள்ளி சிறுமியை, நாடக காதல் வெறியன் ஒருவன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அத்துமீறி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டி அடுத்த சின்னபேட்டையை சேர்ந்தவர் பாண்டியன். இவரின் மகன் ஆகாஷ். இவனுக்கு வயது 19 ஆகிறது.

இவன் அதே ஊரைசேர்ந்த பிளஸ்-1 படிக்கும் பள்ளி மாணவியிடம் தன்னை காதலிக்கும் படி வற்புறுத்தி வந்துள்ளான். ஆனால் அந்த மாணவி தான் படிக்க வேண்டும். என்னை படிக்க விடுங்கள் என்று சொல்லி உள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று மாணவி தனது வீட்டின் தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அந்த நாடக காதலன் ஆகாஷ், திடீரென அந்த மாணவியை கட்டிப் பிடித்து முத்தமிட்டடு உள்ளான்.

இதனால் அதிர்ந்துபோன அந்த சிறுமி, கத்தி கூச்சலிடவே, நாடக காதலன் ஆகாஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார். 

இது குறித்து ஆகாஷின் குடும்பத்திடம் புகார் சொல்ல சென்ற சிறுமியின் போற்றோருக்கு, நாடக காதல் குடும்பம் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் வழக்குப்பதிந்த போலீசார் ஆகாசை கைது செய்துசிறையில் அடைத்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man kiss and hug school girl


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->