திருப்பத்தூர்: தண்டவாளத்தை கடந்த போது வாலிபருக்கு நேர்ந்த பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை தேடி வந்த வாலிபர் தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலை, வாலிபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் ரயில்வே போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கிருஷ்ணகிரி மாவட்டம் கன்னட அல்லி கூட்ரோடு பகுதியை சேர்ந்த விமல் (38) என்பதும், அவர் வேலை தேடி வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man killed in train collision in Thirupattur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->