சாலையை கடக்க முயன்ற வாலிபர்.! அரசு பேருந்து மோதி உயிரிழப்பு.!
Young man killed govt bus accident in Villupuram
விழுப்புரம் மாவட்டத்தில் சாலையை கடக்கும் முயன்ற வாலிபர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் பிரபு(30). இவர் செஞ்சி காவல் நிலையம் எதிரே சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்பொழுது செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக பிரபு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இந்த விபத்தில் பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Young man killed govt bus accident in Villupuram