#வைரல் வீடியோ: மேம்பாலத்தில் இருந்து பேருந்தில் குதித்த வாலிபர்! - Seithipunal
Seithipunal


திருப்பூர் பழைய பேருந்து நிலையம் முன்புறம் மேம்பாலம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் காலை வாலிபர் ஒருவர் இந்த மேம்பாலத்தின் மேல் நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென்று அந்த வாலிபர் பாலத்தின் கைப்பிடி சுவரில் ஏறி நின்று கம்பியை பிடித்தபடி கீழே குதிக்க முயன்றார்.

அப்பகுதியில் சென்றுகொண்டு இருந்த பொதுமக்கள், அந்த வாலிபரை கீழே குதிக்க வேண்டாம் என்று சத்தம் போட்டனர். ஆனால் வாலிபர் பல்லடம் சாலையை நோக்கி வந்த அரசு பேருந்தின் மீது குதித்தார். இதை பார்த்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் வாலிபர் பேருந்தின் பேர்கூரையில் இருந்து உருண்டு கீழே விழுந்தார். இதில் அவர் லேசான காயம் ஏற்பட்டது.

பொதுமக்கள் அந்த வாலிபரை மீட்டு தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி பகுதியை சேர்ந்த சரத்குமார் (வயது 27) என்பது தெரியவந்தது. மேலும் இவர் சில காலம் ஓட்டுனராக பணியாற்றியுள்ளார். மனநிலை பாதித்தும் காணப்பட்டுள்ளார்.  

பின்னர் அவரிடம் இருந்த அலைபேசி மூலம் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுடன் சரத்குமாரை அனுப்பி வைத்தனர். அவர் மேம்பாலத்தில் இருந்து குதித்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man jumping from bridge to bus


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->