திருப்பத்தூர்: பாட்டி வீட்டிற்கு சென்ற இளைஞருக்கு நடந்த சோகம்..!
Young man drowns in river near Thiruppathur
ஆற்றில் மூழ்கி இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் கோட்டார் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் (18). இவர் அங்குள்ள தேங்காய் மண்டியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். தினேஷ் நேற்று தனது தாத்தா பாட்டி வீட்டிற்கு பாலாறு கிணற்றின் வழியே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவர் ஆற்றில் மூழ்கினார். உதவி கேட்டு சத்தம் போட்டு அவரை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்க முயன்றனர் ஆனால் ஆற்றுநீரில் வேகம் அதிகம் இருந்ததாலும் ஆழமான பகுதிக்கு சென்றதாலும் அவர்களால் அவரை மீட்க முடியவில்லை.
சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அங்கிருந்தவர்கள் மீட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தினேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஆற்றில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Young man drowns in river near Thiruppathur