திருவாரூர்: ஆற்றில் குளிக்க சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


ஆற்றில் வெள்ளத்தில் மூழ்கி இளைஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், கொடிக்கால் பாளையத்தை இர்பானுதீன் (19). இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் அம்மையப்பன்  அருகில் உள்ள ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார்.

அப்போது ஆற்றில் குளித்து கொண்டிருந்த போது நீர் சுழலில் சிக்கி கொண்டார். இதனை கண்ட அவரது நண்பர்கள்  அவரை காப்பாற்ற முயன்றனர். உடனே காவல்துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் அளித்தனர்.

உடனே அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் இர்பானுதீன் உடலை மீட்டனர். இதனை அடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man drowns in river


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->