நண்பர்களுடன் குளிக்கச் சென்ற வாலிபர்.! முல்லைப்பெரியாற்றில் மூழ்கி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் நண்பர்களுடன் குளிக்க சென்ற வாலிபர் முல்லைப் பெரியாற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (38). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் மணிவண்ணன் நண்பர்களுடன் சேர்ந்து நேற்று முன்தினம் கம்பம் அருகே தொட்டன்மன்துறை முல்லைப்பெரியாற்றில் குளிக்க சென்றுள்ளார்.

அப்பொழுது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த மணிவண்ணன் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால், நீரில் மூழ்கியுள்ளார். இதைப் பார்த்த நண்பர்கள் மணிகண்டனை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் காப்பாற்ற முடியாததால் இது குறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மணிவண்ணனை தேடும் பணியில் ஈடுபட்டு, நேற்று காலை தடுப்பணை பகுதி அருகே மணிவண்ணனின் உடலை மீட்டனர். இதையடுத்து போலீசார் மணிவண்ணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man drowned river in theni


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->