அளவுக்கு அதிகமான போதை., ஊசி மூலம் மதுவை உடலில் ஏற்றிய வாலிபர் மரணம்..! ஈரோட்டில் நடந்த அவலம்..!! - Seithipunal
Seithipunal


மதுவை ஊசி மூலம் ஏற்றியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம்,  பெரியசமூர் பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ் . இவருக்கு வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் அவர் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், அவர் தோள்பட்டை வலியை போக்குவதாக மதுதான் சரியான மருந்து என நண்பர்கள் சிலர் அறிவுரை கூறியுள்ளனர்.

இதனால், அவர் போதைபழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனிடைய அவர் வலி நிராவணி மருந்துகளை அவர் ஊசி மூலம் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த  28 தேதி அளவு கடந்த குடி வெறியால் அவர் மதுவை ஊசி மூலம் உடலில் ஏற்றியுள்ளார்.

இதனால் அவர் மயக்கமடைந்துள்ளார். இதனை கண்ட அவரது பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனிறி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதைக்கு அடிமையாகி இளைஞர் செய்த இந்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man dies after injecting alcohol


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->