ஒரே இடத்தில் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த கார்.. காரை கதவை திறந்த காவல்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!!
young man death in car
கோவை மாவட்டம் நெகமம் அருகே ஆண்டி பாளையத்தில் இருந்து வடசித்தூர் செல்லும் வழியில் வெகு நேரமாக ஆல்டோ மாருதி கார் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் கார் நிற்பதை கண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த காவல்துறையினர் காரை கதவை திறந்து பார்த்தபோது காரின் முன் இருக்கையில் ஒரு வாலிபர் இறந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டாரா? கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.