#கோவை || தந்தை கண்டித்ததால் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை
Young man commits suicide by hanging in kovai
கோவை மாவட்டத்தில் தந்தை கண்டித்ததால் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கோவை மாவட்டம் இடிகரை அருகே உள்ள அம்மன் நகரை சேர்ந்த பாலன் என்பவரின் மகன் வசந்தகுமார்(22). இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வசந்தகுமார் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை வசந்தகுமாரின் தந்தை கண்டித்து உள்ளார்.
இதனால் மனம் உடைந்த வசந்தகுமார் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சடைந்த நிலையில், இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வசந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Young man commits suicide by hanging in kovai