#அரியலூர் || வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் மேட்டுதெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சிவகுமார்(27). இவர் வணிகவரித்துறையில் வேலை பார்த்து வந்தார்.

இவரது தாயார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இவர் தந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு வந்த சிவகுமார், இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றுள்ளார்.

இதையடுத்து இன்று காலை வெகு நேரமாகியும் சிவக்குமார் எழுந்து வரவில்லை என்பதால் தந்தை, மகனை எழுப்புவதற்காக அறைக்கு சென்று பார்த்தபோது, சிவகுமார் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் காவல்துறையினர் சிவகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில், சிவகுமாரின் அறையில் ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

அந்த கடிதத்தில் மன உளைச்சல் அதிகமாக இருப்பதால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதி இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man commits suicide by hanging in Ariyalur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->