மது அருந்த பணம் தராததால் ஆத்திரத்தில் தற்கொலை செய்துக்கொண்ட வாலிபர்..!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அருகே ஆண்டி குப்பத்தை சேர்ந்தவர் காசி. இவருக்கு 27 வயதுடைய திருமணம் ஆகாத வினோத் குமார் என்ற மகன் உள்ளார்.வினோத்குமார் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். 

இவர் தனது தாயாரிடம் மது குடிக்க பணம் கேட்டார். தாயார் பணம் தரமறுத்ததால் ஆத்திரம் அடைந்த வினோத்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூரில் உள்ள மருத்துவமணையில் சேர்க்கப்பட்ட  வினோத்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து காடாம் புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man attempt sucide for money


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->