தேனி : சிறுமிக்கு கட்டாய திருமணம்.. போக்சோவில் கைதான இளைஞர்.. !
Young man arrested for forcibly marrying girl
சிறுமியை கட்டாய திருமணம் செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தேனி மாவட்டம், துரைசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்க பரமானந்தம் . ஆட்டோ ஒட்டுநரான இவர் கடந்த ஆண்டு 16 வயது சிறுமியை மே மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நேற்று முன் தினம் அந்த சிறுமிக்கு தேனி மருத்துவகல்லூரியில் ஆண் குழந்தை பிறந்தது.
சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து மருத்துவமனை நிர்வாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சிறுமிக்கு கட்டாய திருமணம் நடந்ததை ஒப்புகொண்டனர்.
இதனை அடுத்து, தங்க பரமானந்தம் மற்றும் சிறுமியின் பெற்றோர் மீது வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தங்க பரமானந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Young man arrested for forcibly marrying girl