விருதுநகர்: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆண்டாள்புரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(26). இவருக்கும் சாத்தூர் பகுதியை சேர்ந்த 16 வயதில் சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இதையடுத்து சிறுமியை கார்த்திக் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்நிலையில் சிறுமிக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு வீட்டில் அடிக்கடி வாந்தி எடுத்துள்ளார். இதனால் பெற்றோர் சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமிகள் தாயார் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்தியை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man arrested for 16 year old girl pregnant in virudhunagar


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->