எவ்வளவு பேர் தான் பார்ப்பீங்க., பெற்றோரை அதிரவைத்த இளம்பெண்? பதற வைக்கும் நிகழ்வு! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள செட்டிகுளம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் அந்தோணி பாஸ்கர். இவருடைய மகள் பெயர் கிறிஸ்டி. இவருக்கு வயது 26. இதையடுத்து கிறிஸ்டிக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். 

இதனால் கிறிஸ்டிக்கு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் கிறிஸ்டியை பல நபர்கள் பெண் பார்த்து விட்டு சென்றதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவருக்கு எந்த மாப்பிள்ளையும் அமையவில்லை என தெரிகிறது. இதனால் கிறிஸ்டியின் திருமண பேச்சுவார்த்தை தள்ளி போகியுள்ளது. 

திருமண தள்ளி போன விரக்தியின் இருந்த கிறிஸ்டி நேற்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியில் சென்று வீடு திரும்பிய கிறிஸ்யின் பெற்றோர் கிறிஸ்டி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்துகாவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இது தொடர்பாகவிசாரணை நடத்தினர். 

பின் கிறிஸ்டியின் உடலைகைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிறிஸ்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம்  அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் திருமணம் தள்ளி போனதால் தற்கொலை முடிவை அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young girl sucide in tirunelaveli


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->