திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய பெற்றோர்…. மகள் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


திருமணத்திற்கு வற்புறுத்தியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மாங்காளி. இவருக்கு திருமணமாகி  மனைவியும் ஆர்த்தி என்ற மகளும் உள்ளார். இந்நிலையில், அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர்.

ஆனால், அவருக்கு திருமணம் செய்வதில் விருப்பம் இல்லையென்று கூறப்படுகிறது.  பல முறை பெற்றோரிடம் கூறியும் அவர்கள் அதனை கேட்காமல் ஆர்த்திக்கு வரன் பார்த்துள்ளனர். இதனால், மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதற்கிடையில், வீட்டில் யாரும் இல்லாத போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young girl committed Suicide near Thiruvallur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->