காதல் தொல்லை கொடுத்து வந்த சைக்கோ காதலன், இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


முன்னாள் காதலனின் மிரட்டலுக்கு பயந்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம்,  மருதங்கோடு பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ். இவருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.  இவரது இரண்டாவது மகள் திவ்யா அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவரும் ரஞ்சித் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அவரது உண்மை முகம் தெரிய வரவே அந்த இளைஞருடன் பழகுவதை தவிர்த்து வந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த ரஞ்சித் அவரை தொல்லை செய்து வந்துள்ளார். இதுகுறித்து குறித்து திவ்யாவின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில்  விசாரணை மேற்கொண்டதில் இருதரப்பினரையும்  சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். ஆனாலும். ரஞ்சித் திவ்யாவை தொல்லை செய்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த திவ்யாவின் அண்ணன் ரஞ்சித்திரம் கேட்ட போது ரஞ்சித் தனது கூட்டாளிகளுடன் அவரை தாக்கியுள்ளார்.

மீண்டும் ரஞ்சித்தின் தொல்லை அதிகரிக்கவே மன உளைச்சலில் இருந்த திவ்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைகாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து திவ்யாவின் உறவினர்கள் தெரிவிக்கையில், அவரின் தற்கொலைக்கு காரணமான ரஞ்சித் மற்றும் அவரது  நண்பர்களை கைது செய்யாமல் தங்களுக்கு உதவி செய்த நபரை கைது செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், மகளின் மரணத்திற்கு நியாயம் வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young Girl Committed Suicide in Kanniyakumari


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->