திருப்பூர்: சைக்கிள் வாங்கி தரவில்லை.. சிறுவன் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


சைக்கிள் வாங்கி தரவில்லை என்பதால் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சமபவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்  மாவட்டம், முத்தண்ணம்பாளையம்  பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார் – சுமதி தம்பதியினர். இவர்களுக்கு சரண்சுதன் (13) என்ற மகன் இருக்கிறான். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8 வகுப்பு படித்து வருகிறார்.

கணவன் மனைவிகிடைய ஏற்பட்ட பிரச்சனையால்  சுமதி மகனுடன் தனியாக வசித்து வருகிறார். சுமதி பகுதி நேர ஆசிரியராகவும், மாலையில் பெட்ரோல் பங்க்கில் கணக்காளராகவும் இருந்து வருகிறார்.

சரண்சுதன் தாயிடம் சைக்கிள் வாங்கி தர சொல்லி தொல்லை செய்துள்ளார். ஆனால், சம்பளம் வாங்கி தருவதாக கூறினார். இதனால், மன உளைச்சலில் அம்மா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டிற்கு வந்து பார்த்த போத சுமதி மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதனை அடுத்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young Boy Commits Suicide Near Thiruppur


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->