குளிர்ந்தது சென்னை இடி மின்னலுடன் மழை.! மக்கள் மகிழ்ச்சி.!!
yesterday rain in chennai
சென்னையில் நேற்று இரவு விடிய விடிய இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது இந்த நிலையில் வட கடலோர மாவட்டங்களில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி நேற்று இரவு சென்னையில் சுமார் 7.45 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது சென்னை அண்ணா நகர் அமைந்தகரை அரும்பாக்கம் முகப்பேர் இடங்களிலும் போரூர் தாம்பரம் உள்ளிட்ட இடங்களிலும் மேலும் பெரும்பாலான இடங்களில் மழை பரவலாக பெய்தது. சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மழை பெய்தது அதன்பிறகு தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்துவந்த நிலையில் தற்போது நேற்று இரவு பெய்த மழையால் சென்னை ஓரளவிற்கு குளிர்ந்த நிலையை அடைந்துள்ளது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சியில் அடைந்துள்ளனர். இன்னும் சில இடங்களில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
yesterday rain in chennai