#Breaking: முதுபெரும் எழுத்தாளர் கி.ராவின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்.!!
Writer K RajaNayaranan Honor Govt Funeral Function Ends 19 May 2021
கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன் காலமானார். கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி.ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டார். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர் ஆகும்.
கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவராவார். சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்றுள்ளார்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன் வயது முப்பு காரணமாக நேற்று முன்தினம் இரவு காலமானார். எழுத்தாளர் கி.ராவுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் எனவும், அவரின் சிலை திறக்கப்படும் எனவும் முதல்வர் முக ஸ்டாலின்
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இடைச்செவல் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட முதுபெரும் எழுத்தாளர் கி. ராவின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு, துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. அரசு சார்பாக மாவட்ட ஆட்சியர், காவல் அதிகாரிகள், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் மரியாதை செய்தனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Writer K RajaNayaranan Honor Govt Funeral Function Ends 19 May 2021