கள்ளக்காதல் விவகாரம்: சுத்தியால் அடித்து தொழிலாளி கொலை.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளக்காதல் பிரச்சனையில் தொழிலாளி சுத்தியால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கருமாநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் வையப்பன் (50). இவர் அதே பகுதியை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் அது தோட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வையப்பனுக்கும், முத்துலட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், இதனை முத்துலட்சுமியின் சம்மந்தியான சக்திவேல் என்பவர் கண்டித்துள்ளார். இருப்பினும் இரண்டு பேரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வையப்பனை, சுத்தியால் சரமாரியாக சக்திவேல் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த வையப்பனை மீட்டு முத்துலட்சுமி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

worker was killed by hitting with a hammer in Dindigul


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->