மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை
Worker suicide in virudhunagar
விருதுநகர் மாவட்டத்தில் மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் கீழ திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் தொழிலாளி மாரீஸ்வரன்(வயது25). இவருக்கும், இவருடைய மனைவி ராஜேஸ்வரிக்கும் அடிக்கடி குடும்பத்தில் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த கருத்து வேறுபாடு காரணமாக மாரிஸ்வரனை விட்டு அவரது மனைவி ராஜேஸ்வரி பிரிந்து சென்று விட்டார்.
இதனால் மனவேதனை அடைந்த மாரீஸ்வரன் வாழ்க்கையில் வெறுப்படைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Worker suicide in virudhunagar