தென்காசி: தொழிலாளி தற்கொலை.! போலீசார் விசாரணை.!
Worker suicide in thenkasi
தென்காசி மாவட்டத்தில் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(35). இவர் செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஆவுடையம்மாள். இந்நிலையில் நேற்று இரவு செங்கல் சூலையில் இருந்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மாரிமுத்து, மனைவியிடம் அருகில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று சாப்பாடு வாங்கி வர சொல்லி அனுப்பியுள்ளார்.
இதையடுத்து ஆவுடையம்மாள் சாப்பாடு வாங்கி விட்டு, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கணவர் மாரிமுத்து தூக்கில் பிணமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சடைந்து அலறியுள்ளார்.
இவரது அழகர் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மாரிமுத்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Worker suicide in thenkasi